tamilnadu

img

பசுவை கொன்றதாக ஒருவர் அடித்துக் கொலை!

ராஞ்சி:
மாடுகளை இறைச்சிக்காக கடத்துகிறார்கள்; அல்லது மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று கூறி, அப்பாவி இளைஞர்களை, இந்துத்துவா அமைப்பினர் அடித்துக் கொல்லும் சம்பவங்கள், வட மாநிலங்களில் வாடிக்கையாகி விட்டன. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் ஜலதங்கா கிராமத்தில் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார்.இங்கு 3 பேர், இறந்துபோன பசுவின் உடலுடன் இருக்கிறார்கள் என்று கூறி, பசு குண்டர்கள், ஒட்டுமொத்த கிராமத்தினரையும் திரட்டிச் சென்று தாக்குதலை நடத்தியுள்ளனர். இதில், சம்பந்தப்பட்ட 3 பேரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்களை போலீசார் மீட்டு ராஞ்சியில் உள்ள ராஜேந் திரா மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.எனினும் கோபால்பூர் கிராமத்தைச் சேர்ந்த கலாந்தஸ் பர்லா என்பவர் சிகிச்சைபலனின்றி இறந்து போயுள்ளார். பாகு கச்சாப் மற்றும் பிலிப் கோரோ ஆகிய 2 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

;